210. சோபுரநாதர் கோயில்
இறைவன் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர்
இறைவி சோபுரநாயகி, சக்தியாயதாட்சி
தீர்த்தம் சோபுர தீர்த்தம்
தல விருட்சம் கொன்றை
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருச்சோபுரம், தமிழ்நாடு
வழிகாட்டி கடலூர் - சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம் இரயில் நிலையம் உள்ள பாதையில் இடதுபுறம் திரும்பி இரயில்வே கேட்டை தாண்டிச் சென்றால் கோயில் பெயர் பலகையைப் பார்த்து ஊருக்குள் சுமார் 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். தற்போது தியாகவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. கடலூரிலிருந்து திருச்சோபுரத்திற்கு குறைந்த அளவு பேருந்து வசதி உள்ளது. கடலூருக்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tiruchopuram Gopuramதிரிபுவன சக்கரவர்த்தியின் மனைவியான தியாகவல்லி என்னும் அரசகுமாரி பூசை செய்ததால் தியாவல்லி என்றும் பெயர் உண்டானது. இருவரின் உருவரும் வடக்கு பிரகாரத்தில் உள்ளன. அகத்தியர் பூசை செய்த தலம். காகபுஜண்ட மகரிஷி இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இத்தலம் மணலால் மூடப்பட்டு இருந்தது என்றும், சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி' என்னும் தம்பிரான் இக்கோயிலைக் கண்டுபிடித்து திருப்பணி செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்னும் பெயரும் உண்டு.

Tiruchopuram Moolavarமூலவர் சிறிய லிங்கத் திருமேனி. சதுர ஆவுடையார். மேற்கு பார்த்த சன்னதி. அம்பிகை சுமார் 5 அடி உயரம் கொண்டு நமக்கு அருள்பாலிக்கின்றாள். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 94425 85845.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com